Thursday, December 9, 2010

சீமான் விடுதலை சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவுசீமான்/realease

இந்திய மீனவனை இலங்கை ராணுவம் தாக்கினால் சிங்கள மாணவனை தாக்குவோம் என்பது போன்ற உணர்ச்சிகர பேச்சினை பேசிய திரைப்படஇயக்குனர் சீமானை இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தமிழக அரசு கைது செய்ய உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அந்த உத்தரவை ரத்து செய்து சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து சீமான் இன்று மாலை விடுதலை ஆவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய சீமான், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது.


இதனை எதிர்த்து சீமான் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மராவ், ஹரிபரந்தாமன் ஆகியோர், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து சீமான் இன்று மாலை அல்லது நாளை விடுதலை செய்யப்படுகிறார்.

1 comment:

  1. காங்கிரசுக்கு கெட்ட காலம் ஆரம்பித்துடுத்து
    ajithfar1992@gmail.com

    ReplyDelete