Monday, December 6, 2010

கருணாநிதியை, மீண்டும் ஆறாவது முறையாக முதல்வர் ஆவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஸ்டாலின்

கருணாநிதியை, மீண்டும் ஆறாவது முறையாக முதல்வர் ஆவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஸ்டாலின்

மக்கள் நலனுக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் கருணாநிதியை, மீண்டும் முதல்வர் ஆவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம் மாவட்டம் சித்தலூர் ஊராட்சியில், 2 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள சமத்துவபுரத்தை திறந்து வைத்து அவர் பேசியதாவது: சமத்துவபுரம் திட்டம் இந்த ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டம் இல்லை. கடந்த 1996ம் ஆண்டே கருணாநிதி முதல்வர் பொறுப்பேற்ற போது துவக்கி வைக்கப்பட்டு, 148 இடங்களில் சமத்துவபுரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பின், 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அப்போது முதல்வர் பொறுப்பேற்ற ஜெ., சமத்துவபுரம் திட்டத்தை கிடப்பில் போட்டார்.மீண்டும் ஐந்தாவது முறையாக கருணாநிதி முதல்வரான போது, சமத்துவபுரம் உருவாக்கப்படும் என்று கூறினார். பெரியாரின் 92வது வயதை குறிக்கும் வகையில் இனி உருவாக்கப்படவுள்ள 92 சமத்துவபுரம் இடங்களிலும் பெரியார் சிலை வைக்கப்படும் என்றும் கூறினார். சமத்துவபுரத்தின் நோக்கம் ஜாதி, மதம் பேதமின்றி ஒன்றுபட்டு ஒருமித்த கருத்துடன் வாழ வேண்டும் என்பதாகும்.


இதேபோல், தமிழகத்தின் ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, இலவச "டிவி', சமத்துவபுரம், உயர் சிகிச்சைக்கான கலைஞர் காப்பீடு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.தமிழகத்தில் குடிசை வீடுகளே இருக்கக்கூடாது என்று எண்ணிய கருணாநிதி, கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதற்கு தமிழகத்தில் 21 லட்சம் குடிசை வீடுகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவை அனைத்தும் தற்போது கான்கிரீட் வீடுகளாக்கும் பணிகள் நடந்து வருகின்றன.


தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டத்தை உருவாக்கி வரும் கருணாநிதியை, மீண்டும் ஆறாவது முறையாக முதல்வர் ஆவதற்கு பொதுமக்கள் எப்போதும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஸ்டாலின் பேசினா

No comments:

Post a Comment