காங்கிரசின் சிக்கல்களை எதிர்கொள்ள வியூகம் அமைக்கப்படும்
அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், பொதுச்செயலாளர் ராகுல்காந்தி உள்பட 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
வடமேற்கு டெல்லியில் உள்ள சண்டிகார் சாலையில் புராரி என்ற இடத்தில் இம்மாநாடு நடைபெறுகிறது. சுமார் 20 கோடி ரூபாய் செலவில் இந்த மாநாடுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. உணவு கூடம், மருத்துவமனை, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கும் வகையில் 400க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மாநாட்டில் அரசியல், பொருளாதாரம், வெளியுறவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 4 ஆண்டுகளுக்கு பிறகு, இம்மாநாடு நடைபெறுகிறது. இது, 83 வது மாநாடு ஆகும். கடந்த 1978 ம் ஆண்டுக்கு பிறகு, இப்போதுதான் டெல்லியில் மாநாடு நடக்கிறது. ..
இவங்க எப்பவும் இப்படிதான் பாஸ்
ReplyDeleteநம்பள வச்சி காமெடி பண்றதே வேலையா போச்சி
இங்கயும் கொஞ்சம் இருக்கு
http://singhisnotking.blogspot.com/2011/01/1.html