அலகாபாத் உயர் நீதிமன்றம் குறித்து அதிரடி கருத்து வாபஸ் பெற உச்சநீதிமன்றம் மறுத்தது
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சில நடவடிக்கைகள் அழுகிப்போயுள்ளன", "மனம் போன போக்கில் செயல்படுகிறார்கள்" ஆகிய கருத்துகளை திரும்பப் பெற உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.பரபரப்பை ஏற்படுத்திய இந்த கருத்தை உச்சநீதிமன்றம் திரும்பப் பெற வேண்டும் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த கருத்தை திரும்பப் பெற நீதிபதிகள் மார்க்கண்டே கட்ஜூ, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்றக் குழு மறுத்துவிட்டது. எனினும், "திறமையான மற்றும் நேர்மையான நீதிபதிகளும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உள்ளனர்." என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment